தாய்நாட்டில் அச்சுறுத்தல்… கனடாவில் புகலிடம் கோரும் மியன்மார் அழகி!

0
416

மியான்மர் அழகிப்போட்டி வெற்றியாளர் ஹான் லே (Han Lay), அவரது தாயகத்தில் ஆளும் இராணுவ ஆட்சிக்குழுவால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

ஆகவே, தாய்லாந்தில் அடைக்கலம் புகுந்திருந்த Han Lay கனடாவுக்குத் தப்பியோடியுள்ளார். அவர் கனடாவில் புகலிடம் கோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

தாய்நாட்டில் அச்சுறுத்தல்... கனடாவில் புகலிடம் கோரும் அழகி! | Miss Myanmar Flees To Canada

Han Layக்கும் மியான்மர் இராணுவத்துக்கும் என்ன பிரச்சினை?

2021 ஆம் ஆண்டில், அழகுப் போட்டியின் இறுதிப் போட்டியில் ஹான் லே உணர்ச்சிகரமான உரையை ஆற்றியபோது உலகின் கவனத்தை ஈர்த்தார்.

தாய்நாட்டில் அச்சுறுத்தல்... கனடாவில் புகலிடம் கோரும் அழகி! | Miss Myanmar Flees To Canada

ஆளும் இராணுவ ஆட்சிக் குழுவின் அராஜகத்தை விளம்பரப்படுத்த, ‘மியான்மருக்காக பிரார்த்தியுங்கள்’ என்ற பதாகையை கையில் வைத்திருந்த ஹான் லேயின் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவரது பேச்சைத் தொடர்ந்து ஹான் லேக்கு கொலை மிரட்டல் வந்தது. அதனால் தாய்லாந்துக்கு அழகுப் போட்டிக்காகச் சென்ற ஹான் லே, திரும்ப வேண்டாம் என்று முடிவெடுத்தார். அதைத் தொடர்ந்து, Han Lay தாய்லாந்திலும் சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது.

தாய்நாட்டில் அச்சுறுத்தல்... கனடாவில் புகலிடம் கோரும் அழகி! | Miss Myanmar Flees To Canada

இந்நிலையில், ஹன் லே கனடா சென்றுள்ளதாகவும், அங்கு அரசியல் தஞ்சம் கோர உள்ளதாகவும் தாய்லாந்து குடியேற்ற அமைப்பின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

Han Layக்கு சில சர்வதேச தொண்டு நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

தாய்நாட்டில் அச்சுறுத்தல்... கனடாவில் புகலிடம் கோரும் அழகி! | Miss Myanmar Flees To Canada