கடந்த 06ஆம் திகதி யாழ். பொலிஸாரால் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட இளம் ஆணொருவரின் சடலத்துக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
புகையிரத விபத்து
யாழ். கொக்குவில் பிரதேசத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் குறித்த நபர் இறந்ததாகத் தெரிவித்து யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இறந்தவரின் பெயர், வயது, இடம் எதுவுமே தெரியாத நிலையில் இறந்தவரின் உறவுகள் சடலத்தை அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ளுமாறு யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் கேட்டுள்ளார்.