சௌருபுர பிரதேசத்தில் உள்ள வரவேற்பு மண்டபம் ஒன்றில் நேற்று காலை வயது குறைந்த ஜோடிக்கு திருமணம் நடந்தது. அந்த ஜோடியை அங்குலான பொலிஸார் தடுத்து நிறுத்தியதாக தெரியவந்துள்ளது. திருமண சம்பிரதாய உடையுடன் வயது குறைந்த ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் போதே பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
மணப்பெண்ணுக்கு 15 வயதும் மணமகனுக்கு 19 வயதும் என்றும் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனினும் சிறுமியின் பெரிய தந்தை எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, சிறுமி காதலனுடன் தப்பிச் சென்று அவர்கள் மகொன பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டில் கணவன் மனைவியாக வசித்து வந்துள்ளனர். உறவினர்கள் தலையிட்டு திருமண வரவேற்பு மற்றும் திருமணத்தை பதிவு செய்தனர்.
திருமண வைபவம் நடத்தப்பட்டதாகவும் பொலிசார் உள்ளே சென்றபோது தம்பதிகள் அங்கிருந்த விருந்தினர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கொழும்பு தெற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் இளைஞனை மொரட்டுவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.