மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கணவன்!

0
426

60 வயதுடைய வயோதிபர் ஒருவர் நேற்றிரவு (07) 8 மணியளவில் தனது மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.

இச் சம்பவம் மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளது.

ஆரையம்பதி மாவிலந்துறயைச் சேர்ந்த 60 வயதுடைய 7 பிள்ளைகளின் தாயான நவரெத்திணம் சோதிமலர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிள்ளைகள் அனைவரும் திருமணம் முடித்து வேறு பிரதேசத்தில் வாழ்ந்து வரும் நிலையில் கணவனும் மனைவியும் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளனர்.

சம்பவத்தின் காரணம்

இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வருவதுடன் கணவன் மனைவியை விட்டு வெளியேறி கடந்த ஒரு மாதகாலமாக கல்லாறு பிரதேசத்தில் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவதினமான நேற்று அவரை தேடி மனைவி சென்று சமாதானம் பேசி அழைத்து வந்துள்ளார்.

இதனை அடுத்து நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.