வீதியால் சென்ற 14 வயது சிறுவன் மீது வீதியில் நின்ற 20 வயது இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி உள்ளான்.
“என்னை என்னடா பார்க்கின்றாய்” என கூறி கத்தியால் குத்தி உள்ளான்.
வீதியால் சம்பவதினம் மாலை சிறுவன் வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த போதே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அத்தோடு கத்தி குத்துக்கு இலக்காகிய சிறுவனை போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து கத்திகுத்து தாக்குதலை நடாத்தியவரை கைது செய்துள்ள சம்பவம் காத்தான்குடி கர்ப்பலா பிரதேசத்தில் நேற்று (07) மாலை 6 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் போதைபொருள் பாவிப்பதாகவும் இதனால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.