மூதூரில் பெண் ஒருவரை மிகக் கொடூரமாகத் தாக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
பெண்ணின் கணவன், அப்பெண்ணை இவ்வாறு கொடூரமாக தாக்கியுள்ளதோடு பல முறை மின் கம்பத்தில் பெண்ணின் தலையை மோத முற்பட்டுள்ளார்.
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாக்குதல் இடம்பெற்ற போது பெருமளவிலான மக்கள் அங்கு இருந்த போதிலும், குறித்த பெண்ணை காப்பாற்ற எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.
இந்த சம்பவத்தை அருகில் இருந்த ஒருவர் தனது கைப்பேசியில் காணொளியாக பதிவு செய்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளான பெண்ணின் கணவர் மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெத்துள்ளனர்.