யாழ்.நவாலியில் வீதியால் சென்ற 18 வயது இளைஞன் மீது வாள்வெட்டு!

0
712

யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் இளைஞன் ஒருவர் மீது சரமாரியாக வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோண்டாவில் கிழக்கை சேர்ந்த ச.துசாளன் (வயது 18) எனும் இளைஞன் மீதே இவ்வாறு வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நவாலி கிழக்கு பகுதியில் உள்ள நண்பனின் பிறந்தநாளுக்கு நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று விட்டு வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியுள்ளார்.

யாழில் விதியால் சென்ற  இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு! | A Barrage Of Swords On The Young Man Jaffna

5 பேர் கொண்ட வன்முறை குழு தாக்குதல்

இதன்போது நவாலி சம்பந்தப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட வன்முறை குழு வாள்வெட்டினை மேற்கொண்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் வன்முறை கும்பலின் தாக்குதலில் இருந்து தப்பிக்கொள்வதற்காக வீதியில் ஓடிய போதிலும் துரத்தி துரத்தி சரமாரியாக வாள் வெட்டினை மேற்கொண்டு விட்டு வன்முறை கும்பல் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது.

யாழில் விதியால் சென்ற  இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு! | A Barrage Of Swords On The Young Man Jaffna

இதனையடுத்து தாக்குதலுக்கு இலக்கான இளைஞனை அவ்விடத்தில் நின்றவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.