யாழில் விசேட அதிரடிப்படையினர் திடீர் சுற்றிவளைப்பு; கோவிலில் சிக்கிய 11 வாள்கள்

0
487

யாழ்.வட்டுக்கோட்டை – துணைவி பகுதியில் நேற்று இரவு விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பில் 22 வயதான இளைஞன் ஒருவன் 11 வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

துணைவி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் பல விதமான வடிவங்களில் செய்யப்பட்ட வாள்கள் காணப்படுவதாக பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதனை அடுத்து அங்கு விரைந்த அதிரடி படையினர் ஆலயத்தினை சுற்றி வளைத்து தேடுதல் நடாத்தினார்கள். அதன்போது அங்கிருந்து பல வடிவங்களில் செய்யப்பட்ட 11 வாள்களை மீட்டனர்.

பொலிஸாரிடம் ஒப்படைப்பு

அத்துடன் 22 வயதான இளைஞனையும் கைது செய்தனர். மீட்கப்பட்ட வாள்களையும் கைது செய்யப்பட்ட இளைஞனையும் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில்  விசேட அதிரடிப்படையினர் திடீர் சுற்றிவளைப்பு; கோவிலில் சிக்கிய ஆபத்தான  பொருள் | Special Action Forces Sudden Encirclement In Yali

இதேவேளை குறித்த இளைஞனின் தந்தை கோயிலின் பூசகர் எனவும் வாள்களுடன் கலையாடி குறி சொல்பவர் எனவும் அதற்காக பயன்படுத்தும் வாள்களே அவை என இளைஞனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.