இலங்கையில் ஒரே நாளில் 8 விபத்துகள்; 8 பேர் உயிரிழப்பு!

0
359

இலங்கையில் வெவ்வேறு பகுதிகளில் நேற்று முன் தினம் மாலை 6 மணி முதல் நேற்று நண்பகல் 12 மணிவரை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த உயிரிழப்புகள் புறக்கோட்டை, மிரிஹான, வென்னப்புவ, வவுணதீவு, கொக்கரெல்ல, மின்னேரியா, சிகிரியா மற்றும் புளியங்குளம் ஆகிய பகுதிகளில் பதிவாகியுள்ளன.

புறக்கோட்டை கோல் சென்டர் பஸ் தரிப்பு நிலையத்துக்கு முன்பாக மோட்டார் சைக்கிளுடன் மோதி முகத்துவாரம் பகுதியை சேர்ந்த 77 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மிரிஹான தெல்கந்த முச்சந்தியில் கார் ஒன்றுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது ஆளடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இலங்கையில் ஒரே நாளில் இத்தனை விபத்துக்களா! | Fatalities In Increasing Accidents In Sri Lanka

வென்னப்புவ பகுதியிலும் காருடன் மோதி 59 வயதான பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காரின் சாரதி தப்பியோடியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு, வவுணதீவு – குறிஞ்சாமுனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 88 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கொக்கரெல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மின்னேரியாவில் மோட்டார் சைக்கிளும் வான் மோதி இடம்பெற்ற விபத்தில் 38 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் விபத்து தொடர்பில் வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் ஒரே நாளில் இத்தனை விபத்துக்களா! | Fatalities In Increasing Accidents In Sri Lanka

சிகிரியா – இனாமலுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 33 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியா – புளியங்குளம் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.