வெள்ளவத்தை கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த நபர் மரணம்

0
574

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாயா மாவத்தை பகுதியில் கட்டிடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்று முன் தினம் (04) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெள்ளவத்தை கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த நபர் பலி | Person Dies After Falling From Velavatha Building

உயிரிழந்தவர் 12 மாடி கட்டிடம் ஒன்றின் 11வது மாடியை சுத்தம் செய்யும் போது ஜன்னில் இருந்து கீழே விழுந்ததுள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் கிருலப்பனை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.