நீர்வீழ்ச்சியில் செல்ஃபி எடுக்கும் போது இளைஞர் ஒருவர் தவறி விழுந்து பலி!

0
566

ஹல்துமுல்ல உடவேரிய தோட்டத்தில் உள்ள நீர்வீழ்ச்சியில் நேற்று செல்ஃபி எடுக்கும் போது இளைஞர் ஒருவர் தவறி விழுந்து பலி ஆகி உள்ளார்.

இரண்டு இளைஞர்கள் நீர்வீழ்ச்சியை பார்வையிட்ட போது அவர்களில் ஒருவர் செல்ஃபி எடுக்கச் சென்று தவறி நீர்வீழ்ச்சியில் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்வீழ்ச்சியில் இருந்து சுமார் 200 மீட்டர் ஆழத்தில் உயிரிழந்தவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குருதலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.