யாழில் காலில் முள் குத்தி குடும்பஸ்தர் மரணம்!

0
524

யாழில் காலில் முள்ளுக் குத்தியதால் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் – அனலைதீவு 7ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த குமாரசாமி தம்பிராசா (வயது – 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்! | A Family Member Died Tragically In Jaffna Thorn

கடந்த 31ஆம் திகதி அவருக்கு முள்ளு குத்தியுள்ளது.

காலில் கொதி வலியாக இருப்பதாக அனலைதீவு வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்றுள்ளார்.

யாழில் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்! | A Family Member Died Tragically In Jaffna Thorn

அங்கிருந்து ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

யாழில் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்! | A Family Member Died Tragically In Jaffna Thorn

இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார். பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.