கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கப்படவுள்ள உரிமைகள்

0
668

கோட்டபாய ராஜபக்சவுக்கு முன்னாள் ஜனாதிபதிக்கான உரிமைகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஜனாதிபதி உரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகளையும் பெறுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாட்டைவிட்டு வெளியேறி 3 மாதங்களின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி நாட்டுக்கு திரும்பியுள்ளார்.  

தனது மனைவியுடன் நாட்டைவிட்டு வெளியேறிய கோட்டாபய முதலில் மாலைதீவு சென்று அங்கிருந்து சிங்கப்பூரிற்கு சென்றிருந்தார்.

போராட்டங்களை தொடர்ந்து இலங்கையை விட்டு வெளியேறி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று நாட்டை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.