முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தாய்லாந்தில் இருந்து நேற்றிரவு (02) இலங்கை வந்தடைந்தார். அவரை வரவேற்க அமைச்சர்கள், எம்.பிக்கள் குழுவொன்று விமான நிலையம் சென்றிருந்தது.
இந்த நிலையில் கோத்தபாய ராஜபக்ஷ நாடு திரும்பிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட மக்கள் போராட்டத்தை அடுத்து நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய தனது பதவியையும் இராஜினாமா செய்திருந்த நிலையில் நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற நிலையில் போராட்டகாரர்களும் அப்புறப்படுத்தப்பட்டிருந்தனர்.
கோட்டாபய மீள்வருகை
இந்நிலையில் நாட்டைவிட்டு வெளியேறி 3 மாதங்களின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி நாட்டுக்கு திரும்பியுள்ளார். தனது மனைவியுடன் நாட்டைவிட்டு வெளியேறிய கோட்டாபய, முதலில் மாலைதீவு சென்று அங்கிருந்து சிங்கப்பூரிற்கு சென்றிருந்தார்.
அங்கு அவரது விசா காலாவதியான நிலையில் அவரது விசாவை சிங்கப்பூர் நீடிக்காததை அடுத்து கோட்டாபய தாய்லாந்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.