பேராதனை பாலத்தில் இருந்து குதித்த மாணவன் நான்கு நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு!

0
574

பேராதனை பாலத்திலிருந்து மஹாவலி ஆற்றில் குதித்து உயிரிழந்த மாணவனின் சடலம் நான்கு நாட்களின் பின்னர் இன்று (31) பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவர் ஆறில் பாய்ந்து தன்னுயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவரின் சடலம் மஹாவலி ஆற்றின் கன்னொருவ- சீமாமாலகய பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் விசாரணை

சம்பவத்தில் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் 3ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்த பெல்மடுல்ல பகுதியைச் சேர்ந்த 24 வயதான குறித்த இளைஞன் 27ஆம் திகதி மாலை பேராதனை பாலத்திலிருந்து ஆற்றிக்குள் பாய்ந்துள்ளார்.

அதேவேளை மாணவனின் மரணத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என கூறியுள்ள பேராதனை பொலிஸார்  சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.