பதுளையைச் சேர்ந்த ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

0
363

பதுளை நபரொருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுளை – தெய்யனவெல பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க நபரொருவரே நேற்று (30-08-2022) காலை இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

பதுளையிலிருந்து இன்று காலை கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயில் முன் பாய்ந்தே குறித்த நபர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ன நிலையில் பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்தோடு குறித்த நபர் பற்றிய விபரங்களைத் தெரிந்துகொள்ள பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.