திக்வெல்ல – செத்தகல இயற்கை கடல் தடாகத்தில் நீராட சென்ற 22 வயதான இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது காணாமல் போன 22 வயதான இளைஞர் ருஹுணு பல்கலைக்கழகத்தின் மாணவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த இளைஞரை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.