எரிபொருள் நெருக்கடியால் 23 வயது இளைஞன் உயிரிழப்பு

0
488

தொடருந்தில் சிக்குண்டு இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மாத்தறை தொடருந்து நிலையத்தில் நேற்று (17) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் திக்வெல்ல – வெவுருகன்னல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரொருவரே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மாத்தறையில் இருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த சாகரிகா தொடருந்தில் ஏற முற்பட்டபோது தவறி விழுந்த இளைஞர் தொடருந்தின் அடியில் சிக்கியுள்ளார்.

இதனையடுத்து, மாத்தறை செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டனர்.

எனினும் சுமார் ஒரு மணித்தியாலமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை அடுத்து இளைஞன் மீட்கப்பட்டபோதிலும் அவர் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியால் மக்கள் பெரு ஆபத்தான பயணங்களை மேற்கொண்டுவரும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் அண்மையில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.