ஆனைக்கோட்டையை சேர்ந்த குடும்பஸ்தர் டெங்கினால் உயிரிழப்பு

0
551
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஆனைக்கோட்டையை சேர்ந்த இ.ஜெகதீசன் (வயது47) என்பவரே இவ்வாறு டெங்கினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபருக்கு கடந்த 7ம் திகதி நடுக்கத்துடன் காய்ச்சல் ஏற்பட்டிருந்த நிலையில் 8ம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் தொடர்ந்து 2 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றய தினம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.