ஆப்பிரிக்காவில் பெண்ணை கொன்ற ஆட்டுக்கு சிறை தண்டனை!

0
577

ஆப்பிரிக்காவில் பெண்ணை கொன்ற ஆட்டிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஆப்பிரிக்க கண்டத்தின் தெற்கு சூடானில் நடந்துள்ளது.

அங்குள்ள 45 வயதான பெண்மணி ஒருவரை செம்மறி ஆடு ஒன்று கொடூரமாக தாக்கி கொன்றுள்ளது. இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள் ஆட்டைப்பிடித்து ஒரு கூண்டில் அடைத்து சூடான் பொலிஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் அந்த ஆட்டை குற்றவாளியாக வழக்குப்பதிவு செய்து காவல் நிலையத்தில் அடைத்து வைத்திருந்துள்ளனர்.

அதன் பின்னர் பெண்ணை கொன்றதற்காக செம்மறி ஆட்டிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, ஆட்டை ராணுவ சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாம்.