நாளை முதல் எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
மேலும், அவசர தேவைகளுக்காக மாத்திரம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செல்லுமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
எவ்வாறாயினும், மே 19 ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் பழையபடி ஆரம்பிக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.