யாழ் போதனா வைத்தியசாலையின் அவல நிலை!

0
724

கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் பல்வேறு வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதனால், நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகள் மருத்துவ சேவைகளை வழங்குவதில் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றன. நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் இரத்த வங்கிக்கு நேரடியாக இரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. இதனால் வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏனைய வகை இரத்தங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்.

எனவே, வைத்தியசாலையின் இரத்த வங்கியில் A+ வகை இரத்தத்திற்கு தட்டுப்பாடு காணப்படுவதாகவும் இரத்த தானம் செய்ய நன்கொடையாளர்கள் முன்வருமாறும் கோரப்பட்டுள்ளது. இரத்த தானம் செய்பவர்கள் 0772105375 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.