எரிபொருள் விலை அதிகரிக்கப்படலாம்

0
824

கடந்த மாதம் 18ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் இலங்கை பெட்ரோலியக்  கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் நட்டத்தைச் சந்தித்து வருகின்றது  என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

விலைகள் அதிகரித்துள்ள போதிலும் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகியவை நடத்திலேயே விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யும் குறைவான விலையிலேயே விற்பனை செய்யப்படுவதாக அவர் கூறினார்.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக நட்டம் அதிகரித்து வருவதாகவும், ஏப்ரல் 18ஆம் திகதி அதிகரிக்கப்படுவதற்கு முன்னர் இலங்கை பெட்ரோலியக்  கூட்டுத்தாபனத்திற்கு நாளாந்த நட்டம் 1613 மில்லியன் ரூபாவாகும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

Gallery

இந்த நிலையில்  மீண்டும் எரிபொருள் விலை மீண்டும்  அதிகரிக்கப்படலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.