ஆப்கான் மசூதியில் பாரிய குண்டுவெடிப்பு: 33 பேருக்கு நேர்ந்த பரிதாபம்

0
447

ஆப்கானிஸ்தான் உள்ள மசூதி ஒன்றில் குண்டுவெடிப்பில் 33 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இன்றைய தினம் (22-04-2022) ஆப்கானிஸ்தானின் வடக்கு குண்டூஸ் மாகாணத்தின் இமாம் சாஹிப் மாவட்டத்தில் உள்ள மவ்லவி செகந்தர் மசூதியில் நடந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதேவேளை, ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியதில் இருந்து, குண்டுவெடிப்புகளும், தாக்குதல்களும் வழக்கமாகி வருகின்றன.