“மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அவதானத்துடன் செயற்படுங்கள்” சுகாதாரத்துறை வேண்டுகோள்

0
354

இலங்கை வாழ் மக்கள் தற்போது மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அன்றாட நடவடிக்கைகளில் அதிக அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதாரத் துறையினர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மருத்துவ சிகிச்சை தேவையில்லை என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமானது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.