தொடருந்து மோதி இராணுவச் சிப்பாய் மரணம்!

0
665

யாழ்ப்பாணம் தென்மராட்சியின் சாவகச்சேரிப் பகுதியில் புகையிரதக் கடவையில் பயணித்த இராணுவச் சிப்பாய் ஒருவர் தொடருந்து மோதியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதித் தொடருந்து மோதியே குறித்த சிப்பாய் உயிரிழந்துள்ளார்.

சமன்குமார என்ற சிப்பாயே உயிரிழந்ததாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளார்