உக்ரைனின் முக்கிய நகரத்தை விட்டு வெளியேறும் மக்கள்!

0
298

மரியுபோல் நகரின் பெரும் பகுதியை ரஷ்ய படைகள் கைப்பற்றிய நிலையில், எஞ்சியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் நகரை விட்டு வேகமாக வெளியேறி வருகின்றனர்.

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியா பகுதியையும், ரஷ்ய ஆதரவு போராளி குழுவினர் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸ் பகுதியையும் மரியுபோல் நகரம் இணைப்பதால் அதனை கைப்பற்ற ரஷ்ய படைகள் தீவிரம் காட்டி வருகின்றன.

போர் தொடங்கி ஒன்றரை மாதத்துக்கு மேலாக ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதலால், திரும்பிய பக்கமெல்லாம் சிதைந்த கட்டிடங்களும், இறந்தவர்களின் சடலங்களும் காணப்படுகின்றன.

அதேவேளை மரியுபோலில் மட்டும் உக்ரைன் ராணுவத்தினர் 4,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.