பௌத்த மத தலைவர்களின் கருத்துக்களையும் ஆட்சியாளர்கள் செவிமடுக்கவில்லை – ஓமல்பே தேரர்

0
423

பௌத்தமதத்தின் அதிஉயர்மததலைவர்களின் கருத்தினை தற்போதைய ஆட்சியாளர்கள் செவிமடுக்கவில்லை என ஓமல்பே தேரர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மகாநாயக்க தேரர் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது அரசாங்கம் என்று எதுவுமில்லை பலவந்தமாக அதிகாரத்தை கைப்பற்றிய ஆட்சியாளர்கள் தற்போது ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்த முயல்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.