காலி முகத்திடல் பகுதியில் பொலிஸ் வண்டிகள் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்

0
398

கொழும்பில் காலிமுகத்திடல் பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் பகுதியில் பல பொலிஸ் வண்டிகள் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான புகைப்படமொன்றும் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. 

கொழும்பு, காலிமுகத்திடல் போராட்டமானது இன்று ஒன்பதாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையிலேயே பொலிஸ் வண்டிகள் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மேலும், காலிமுகத்திடல் பகுதியில் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் குறித்த தொடர் போராட்டத்திற்கு இலங்கையின் பிரபலங்கள் பலரும் தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. 

Gallery
Gallery
Gallery