நாட்டை கட்டியெழுப்ப தலைமையேற்க தயார்: சம்பிக்க ரணவக்க

0
425

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை கட்டியெழுப்பு வேலைத்திட்டத்திற்கு தலைமையேற்க தான் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்  பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதற்கு நாட்டை நேசிக்கும் நேர்மையான நிபுணர்கள் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவி அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில் தேர்தல் ஒன்றை நடத்துவது எந்த வகையிலும் பொருத்தமற்றது.புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்து கட்சிகளின் ஆதரவையும் பெற்றுக்கொள்வதற்காக தற்போது பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளேன்.

நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி நீக்கம் செய்து, குடும்ப ஆட்சி இல்லாத பின்னணியை உருவாக்க வேண்டும்.

நாட்டை கட்டியெழுப்புவதற்காக நாடாளுமன்றத்திற்கு இருக்கும் அரசியலமைப்பு ரீதியான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.