மட்டக்களப்பில் முகம் சுழிக்கவைக்கும் செயல்; சிக்கிய நபர்கள்

0
515

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி, துறைநீலாவணைக்குச் செல்லும் பிரதான வீதியில் கோழிக்கழிவுகளை வீசிய இருவர் சிக்கியுள்ளனர்.

இன்று காலை மருதமுனையைச் சேர்ந்த இருவர் கோழிகளின் கழிவுகளை பொலித்தீன் பைகளில் இட்டு அதனை முச்சக்கர வண்டியில் ஏற்றி சென்று துறைநீலாவணை பாதையில் வீசியுள்ளனர்.

இந்நிலையில் அவர்களை பின்தொடர்ந்த துறைநீலாவணை சேர்ந்த இளைஞர் குழாம், மற்றும் பிரதேச மக்கள், குறித்த இருவரையும் பிடித்து எச்சரித்ததுடன் அவர்கள் கொண்டு வந்த கழிவுகளை மீண்டும் முச்சக்கரவண்டியில் ஏற்றி அனுப்பியுள்ளனர்.

அத்துடன் இது தொடர்பில் பிரதேசத்திற்கு பொறுப்பான களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர், களுதாவளை பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளர், துறைநீலாவணைக்கான பிரதேச சபை உறுப்பினர், களுவாஞ்சிகுடி சுற்றாடல் பொறுப்பதிகாரி, துறைநீலாவணை தெற்கிற்கான கிராமசேவையாளர், பொதுச்சுகாதார பரிசோதகர் ஆகியோரை தொடர்புகொண்டு தகவல்களையும் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கும் இவ்வாறான செயல்களை செய்யும் நபர்களை தடுக்குமாறும் பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.