ஊரடங்குச் சட்டம் பிறப்பிப்பு! கடைகள் – வீதிகளில் குவியும் மக்கள் கூட்டம்

0
424

இலங்கையில் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வீதிகளிலும் கடைகளிலும் பெருமளவான மக்கள் வருகைதருவதைக் காணக்கூடியதாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முழுவதும் இன்று மாலை 6 மணியிலிருந்து திங்கட் கிழமை காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொழும்பின் பல பகுதிகளிலும் இவ்வாறு மக்கள் பொருள் கொள்வனவில் ஈடுபடுவதைக் காணக்கூடியதாகவுள்ளது.