நாட்டில் தொடரும் நீண்டநேர மின்வெட்டு!

0
274

வார இறுதி நாட்களான இன்றும், நாளையும் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையிலான மின்வெட்டு தொடரும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தொிவித்திருக்கின்றது.

அதற்கமைய A முதல் L வரையான வலயங்களில் இன்றைய தினம் 5 மணித்தியாலங்களுக்கு சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி வலயங்களில் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியில், ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாகவுள்ளது.

அத்துடன் P முதல் W வரையான வலயங்களில் காலை 9 மணிமுதல் இரவு 11 மணிவரையில் 4 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

இதேவேளை, நாளை (27) A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களுக்கு காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 2 மணிநேரம் 15 நிமிடம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.அத்துடன் மாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை 1 மணி நேரம் 15 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. மேலும் P, Q, R, S, T, U, V, W வலயங்களில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.