நாளைய தினம்(22) மேற்கொள்ளப்படவுள்ள மின்துண்டிப்பு தொடர்பாக வெளியான தகவல்!

0
339

இலங்கையில் நாளைய தினம்(22) மேற்கொள்ளப்படவுள்ள மின்துண்டிப்பு தொடர்பான தகவலை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க (Janaka Ratnayake) தெரிவித்துள்ளார்.

அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களிற்குட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை எட்டு மணி தொடக்கம் மாலை ஆறு மணிவரையான காலப்பகுதியினுள் மூன்று மணித்தியாலங்களும் இருபது நிமிடங்களும்,

மாலை ஆறு மணி தொடக்கம் இரவு பதினொரு மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் நாற்பது நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படவுள்ளது.

அதேபோன்று P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களிற்குட்பட்ட பிரதேசங்களுக்கு காலை ஒன்பது மணி தொடக்கம் பிற்பகல் ஐந்து மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டு மணித்தியாலங்களும் நாற்பது நிமிடங்களும்,

மாலை ஐந்து மணி தொடக்கம் இரவு ஒன்பது மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.