யாழில் காணி இல்லாத குடும்பங்களுக்கு மகிழ்ச்சிகரமான தகவல்!

0
565

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்பொழுது இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் 409 குடும்பங்களில் 233 குடும்பங்களுக்கு அவர்களது பிறப்பிடத்திற்கு அண்மையிலே காணிகளை வழங்குவதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த யோசனைக்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நலன்புரி நிலையங்களில் வாழும் காணி இல்லாத 381 குடும்பங்களுக்கு, விலைமதிப்பாளரின் மதிப்பீட்டின் அடிப்படையில், 700,000/- ரூபாய்கள் செலவில் 20 பேர்ச்சஸ் காணித்துண்டை வழங்குவதற்கு இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் 409 குடும்பங்களில் 233 குடும்பங்களுக்கு காணிகள் இல்லையென்பது அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், தங்களது பிறப்பிடத்திற்கு அண்மையில் காணிகளை வழங்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

ஆனாலும், அப்பிரதேசங்களில் தற்போதுள்ள காணிகளின் பெறுமதிக்கமைய 700,000/- ரூபாய்களுக்கு 20 பேர்ச்சஸ் காணித்துண்டைப் பெறுவதற்கு சிரமமான நிலையில், குறித்த தொகைக்கு அதிகரிக்காமல் அரச விலை மதிப்பீட்டாளரின் மதிப்பீட்டின் பிரகாரம், 10 – 20 பேர்ச்சஸ் காணித்துண்டை தனியார் உரிமையாளர்களிடமிருந்து கொள்வனவு செய்து வழங்குவதற்கும், தொடர்ந்து வீடுகளை நிர்மாணிப்பதற்கான பொறிமுறையை தயாரித்து இடம்பெயர்ந்த குடும்பங்களை துரிதமாக மீளக் குடியமர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.