கிளிநொச்சியில் உயர்தர மாணவன் மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை

0
417

கிளிநொச்சி – பிரமந்தனாறு பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் நேற்றைய தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சகோதரிகள் இருவர் பாடசாலைக்கு சென்றுவிட, தாய் சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டார். தந்தையும் கூலித் தொழிலுக்கு சென்றுவிட்ட நிலையில், சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான். தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

இந்த மாணவன் உயர்தரம் வர்த்தக பிரிவில் கல்வி பயின்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி சடலத்தை பார்வையிட்ட பின்னர் சடலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக வி.சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.