முன்னேற வேண்டுமாயின் முழு நாட்டையும் விற்பனை செய்ய வேண்டும்:தயா ரத்நாயக்க

0
410

முன்னேற வேண்டுமாயின் முழு இலங்கையையும் விற்பனை செய்ய வேண்டும் என துறைமுக அதிகார சபையின் தலைவரும், முன்னாள் இராணுவ தளபதியுமான கூறியதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை மாத்திரமல்ல முழு இலங்கையையும் விற்பனை செய்ய வேண்டும் என அவர் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியாளர்களுடன் நாட்டை முன்னேற்றுவது என்பது கஷ்டமான காரியம் என்பதால், முழு நாட்டையும் விற்பனை செய்து விடுவது நல்லது எனவும் தயா ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.