சென்னை – மாடம்பாக்கம் அடுத்த பதுவஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 48). சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தலைமை ரயில்வே பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்து வந்தார். கடந்த மாதம் இவர், திண்டிவனம் ரயில் நிலையத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.
அங்கு இவருக்கு கடந்த மாதம் 25ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.