சிறிலங்காவின் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்

0
379

சிறிலங்காவின் வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க நேற்று முதல் அவரின் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவருடன் நெருங்கி பழகிய நிலையில் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் கடந்த 24 ஆம் திகதி இருவரும் வலபனையில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர்.

இதுவரை நாடாளுமன்றில் அமைச்சர், இராஜாங்க அமைச்சர் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.