இலங்கை, யாழில் அதிகாலையில் நடந்த கோர விபத்து: ஒருவர் பலி!

0
363

நெல்லியடி மக்கள் வங்கியின் முன்பாக இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதி திருத்த பணியில் ஈடுபடும் கனரக வாகனமொன்றும், பிக்அக் வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.

வல்லையில் உள்ள விடுதியொன்றில் நடந்த விருந்தில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய குழுவொன்றே விபத்தில் சிக்கியது. வவுனியாவை சேர்ந்த, தற்போது வதிரியை வதிவிடமாக கொண்ட கண்ணன் என்பவரே உயிரிழந்தார்.