டிராக்டர் பேரணி போராட்டம் நிறுத்தப்படுவதாக விவசாயிகள் அறிவிப்பு

0
364

டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் நேற்று நடத்திய டிராக்டர் பேரணியில் மோதல் வெடித்தது. வன்முறைகள் நடந்தது.

போராட்டக்காரர்களை தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை பயன்படுத்தியும் போலீசார் விரட்டியடித்தனர். தொடர்ந்து டெல்லியில் கூடுதல் துணை ராணுவ படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பேரணியில் வன்முறை ஏற்பட்டதையடுத்து டிராக்டர் பேரணி மூலம் நடத்திய போராட்டத்தை நிறுத்திக்கொள்வதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் தொடரும் என்றும் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக விரைவில் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.