திமுக கூட்டணிக்குள் நிச்சயமாக பிளவு ஏற்படும்: அமைச்சர் செல்லூர் கே.ராஜு

0
368

மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள மதுரை கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பங்கேற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் பேசிய அமைச்சர், திமுக ஆட்சி காலத்தில்தான் பொதுத்துறைகள் அனைத்தும் தனியார் மயமானது. ஸ்டாலின் அனைத்தையும் மறந்து விடுகிறார். அவருக்கு ஞாபகமறதி நோய் என நினைக்கிறேன். ஸ்டாலினுக்கு பதவி வெறி பிடித்து உள்ளதால் அரசை குற்றஞ்சாட்டி பேசி வருகிறார் என்றார்.

திமுக கூட்டணிக்குள் பிரச்சினை வந்துவிட்டது. விரைவில் திமுக கூட்டணிக்குள் பிளவு ஏற்ப்படும் என்றும் கூறினார்.