அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அதிரடி உத்தரவு – அதிர்ந்த அமெரிக்கா

0
485

அமெரிக்காவின் 46வது அதிபராக 78 வயதான ஜோ பைடன் நேற்று முன்தினம் பதவி ஏற்றார். வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் வந்து அமர்ந்த முதல் நாளிலேயே ஜோ பைடன் செயல்பட தொடங்கி விட்டார்.

ஒரே நாளில் அவர் அதிரடியாக 15 நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்தார். அவற்றில் பல உத்தரவுகள் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் உத்தரவுகளை மாற்றி அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோ பைடன் பிறப்பித்த முதல் உத்தரவு, 100 நாட்களுக்கு அமெரிக்கர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். அமெரிக்காவின் மத்திய அரசு இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

  • 2016-ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகும் முடிவை முந்தைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எடுத்திருந்தார். இப்போது மீண்டும் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்காவை சேர்க்கும் நடைமுறையை தொடங்க வேண்டும்.
  • கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் அறிவித்திருந்தார். அந்த முடிவு நிறுத்தம்.
  • ஈரான், சிரியா, லிபியா, ஏமன் உள்ளிட்ட சில குறிப்பிட்ட முஸ்லிம் நாடுகள் மீது டிரம்ப் பிறப்பித்த பயண தடைகள் ரத்து.
  • மெக்கிகோ எல்லைச்சுவர் கட்டுமானம் உடனடி நிறுத்தம்

இன்றைய நிர்வாக நடவடிக்கைகளுக்காக நான் பெருமிதம் கொள்கிறேன். நான் அமெரிக்க மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதின் மூலம் எனது செயல்பாடுகளை தொடங்கப்போகிறேன். நீண்ட தூரம் செல்ல வேண்டியதிருக்கிறது. இவை நிர்வாக நடவடிக்கைகள் மட்டுமே. இவை முக்கியமானவை. ஆனால் நாம் செய்யப்போகும் பல விஷயங்களுக்கு சட்டம் தேவைப்படும் என்று ஜோ பைடன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.