இளம் பெண் மீது அசிட் வீச்சு தாக்குதல்; சந்தேக நபர் தலைமறைவு

0
493
Acid Attack Young Woman near Salem

சேலத்தில் இளம் பெண்ணொருவர் மீது அசிட் வீசிய சம்பவம் தொடர்பில் மரம் அறுக்கும் தொழிலாளியான சீனிவாசன் என்பவரை பொலிஸார் தேடி வருகின்றனர். (Acid Attack Young Woman near Salem)

சேலம் ஆட்டையாம்பட்டி அருகேயுள்ள எஸ். பாலம் பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன், முச்சக்கரவண்டி சாரதி குகை லோகுசெட்டி தெருவை சேர்ந்த 31 வயதுடைய காயத்திரி என்பவரும் காதலித்து கடந்த 13 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகன் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 2 ஆவது மகன் 5 ஆம் வகுப்பில் படித்து வருகிறார்.

இந்த நிலையில் பாலமுருகனுக்கும், காயத்திரிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் கணவருடன் சண்டை பிடித்துக்கொண்டு, காயத்திரி வீட்டை விட்டு வெளியேறி குழந்தைகளுடன் குகை பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகின்றார்.

இன்று காலை 9 மணியளவில் 2 மகன்களையும் பாடசாலையில் விடுவதற்காக காயத்திரி அழைத்துக் கொண்டு சென்றார். குகை மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது, மர்ம நபர் ஒருவர் திடீரென வழிமறித்து காயத்திரியின் முகத்தில் அசிட்டை வீசியுள்ளார்.

இதில் காயத்திரியின் முகத்தின் வலது பக்கம், நெஞ்சு பகுதி, கால் பகுதி வெந்தது. அசிட்டை ஒரு புறமாக மர்ம நபர் வீசியதால் அது மெல்ல மெல்ல உடலின் ஒரு பக்கமாக பரவியது.

பொதுமக்கள் அவரை மீட்டு சேலம் அரசு வைத்தியசாலையில் சேர்த்த நிலையில், காயத்திரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து செவ்வாய்ப்பேட்டை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், காயத்திரி மீது அசிட் வீசியவர் பக்கத்து தெருவை சேர்ந்த மரம் அறுக்கும் தொழிலாளி சீனிவாசன் என்பது தெரியவந்தது.

இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். பக்கத்து தெரு என்பதால், சீனிவாசனுக்கும், காயத்திரிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இதனையறிந்த காயத்திரியின் பெற்றோர், உறவினர்கள் கண்டித்தனர். சீனிவாசனுடன் பேசக்கூடாது என்று கூறினர். இதனையடுத்து, காயத்திரியும் சீனிவாசனுடன் பேசுவதை நிறுத்தி விட்டார்.

தினமும் என் கூட ஏன்? பேச மறுக்கிறாய் என்று காயத்திரியிடம் கேட்டார். அதற்கு அவர் பதில் எதுவும் சொல்லாமல் சென்றுள்ளார்.

இதனால் கோபம் அடைந்த சீனிவாசன் சில நாட்களுக்கு முன்னர் ‘என்னிடம் பேசாமல் இருந்தால் உன்னை விட மாட்டேன்’ என்று கூறியுள்ளார். ஆனாலும், காயத்திரி பேசவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த சீனிவாசன் காயத்திரியின் முகத்தில் அசிட் வீசியுள்ளார். தலைமறைவாக உள்ள சீனிவாசனை பொலிஸார் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Acid Attack Young Woman near Salem