சென்னையில், பெண் தொழிலதிபர் வீட்டில் இருந்து, 23 பொருட்களை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தோண்டி எடுத்துள்ளனர்.Female businessman restore idols home india tamil news
நடிகரும், தொழில்அதிபருமான ரன்வீர் ஷா, 62, சைதாப்பேட்டையில் உள்ள, தன் பங்களாவில் பஞ்சலோக சிலைகள் மற்றும் கற்சிலைகளை பதுக்கி வைத்திருந்தார்.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மோகல்வாடி; படப்பை அருகே, கூழாங்கல்சேரியில் உள்ள, விவசாய பண்ணைகளிலும், பல்வேறு விதமான கலைப்பொருட்களை வைத்து இருந்தார்.
இதுவரை, ரன்வீர் ஷா பதுக்கி வைத்திருந்த, 223 பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.ரன்வீர் ஷாவின் நெருங்கிய நட்பு வட்டத்தில் உள்ளவர், பெண் தொழிலதிபர், கிரண் ராவ், 52. இவருக்கு சொந்தமான, மயிலாப்பூர், கஸ்துாரி எஸ்டேட், மூன்றாவது தெருவிலுள்ள பங்களாவில், ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையிலான, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
அப்போது, வீட்டின் வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த, இரண்டு கல் துாண்களை தோண்டி எடுத்தனர்.
இதை தொடர்ந்து, நேற்று வீட்டு வளாக பூங்கா பகுதியில், ஜே.சி.பி., இயந்திரம் உதவியுடன் தோண்டினர்.
அப்போது, பஞ்சலோக சிலை, கல் துாண்கள் உள்ளிட்ட, 23 பொருட்கள் எடுக்கப்பட்டன. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இப்பொருட்களை விலைக்கு வாங்கியதாகவும், போலீசுக்கு பயந்து புதைத்து வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, கூடுதல், எஸ்.பி., அசோக் நடராஜன் கூறியதாவது:
இந்த சிலைகள், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து திருடப்பட்டவை. மிகவும் பழமையானவை என்பதால், இதன் மதிப்பு, பல கோடி ரூபாய் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- “படித்தவர்கள் லஞ்சம் கொடுப்பது மிகப்பெரும் தவறு” – ஐ.ஏ.எஸ் அதிகரி சகாயம்!
- ‘ரெட் அலர்ட்’ வாபஸ் வாங்கி இப்போது ‘ஆரஞ்ச் அலர்ட்’ – கன மழை நீடிக்கும்!
- துணைவேந்தர் நியமனத்தில் ஊழல்! – நடவடிக்கை கோரும் பாமக!
- அம்பேத்கர் இருந்திருந்தால் பாஜவுக்கு பிரம்படி உறுதி..!
- குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு!
- எதிர்கட்சி ட்விட் போடுவதில் மட்டும் ஆர்வம் காட்டுகிறது! – அருண் ஜெட்லி!
- அரசியல் பேசும் நடிகர் விஜய்க்கு நடிகர் கருணாகரன் கோரிக்கை!