2 பிள்ளைகளுக்கு தாயான பெண் ஒருவர், கள்ளக்காதலனுடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். (police files kidnap case former minister jayapal tanjore)
வேளச்சேரியை சேர்ந்த விஜய் ராஜேஷ்குமார், யாழினி தம்பதிகளுக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். தஞ்சாவூரை சேர்ந்த 30 வயதுடைய யாழினி தரமணியில் உள்ள சட்டக் கல்லூயில் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
2 பிள்ளைகள் உள்ள போதிலும் யாழினியை படிக்க வைப்பதற்கு கணவன் மிகவும் விருப்பப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், யாழினி படிக்கும் அதே வகுப்பில் ரித்தீஷ் என்பவரும் படித்துள்ளார். இவர் நாகை அக்கரைபேட்டையை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஜெயபால் என்பவரின் 30 வயது மகன் ஆவார்.
ஒரே வகுப்பில் படிக்கும் ரித்தீஷ் யாழினிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. 2 வருடமாகவே இந்த உறவு வளர்ந்துள்ளது.
யாழினி தன் கள்ளக் காதலை மூடி மறைக்க நிறையவே முயற்சி செய்தார். ஆனாலும் இந்த விஷயம் கணவன் விஜய்க்கு தெரிந்துவிட்டது.
மனைவியை கூப்பிட்டு அறிவுரை கூறினார். யாழினி கேட்கவில்லை. அதனால் கண்டிக்கவும் செய்தார். அதனையும் யாழினி கேட்கவில்லை. படிக்க இனி போக வேண்டாம் என்று விஜய் கூறினார். அதனையும் யாழினியை காதிலே போட்டுக் கொள்ளவில்லை. அதோடு விஜய்யிடம் சண்டைக்கும் வந்துவிட்டார்.
இந்த பிரச்சினை இருவருக்கும் தகராறாக வெடித்து. இதனைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி யாழினி இரண்டு குழந்தைகளை தூக்கிக்கொண்டு தஞ்சாவூருக்கு தன் அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் கடந்த 11 ஆம் திகதி யாழினியை காணவில்லையாம். 2 குழந்தைகளையும் விட்டுவிட்டு எங்கே சென்றார் என தெரியவில்லை. இதனால், பல இடங்களில் விஜய் யாழினியை தேடியுள்ளார்.
இதனையடுத்து, மனைவியை காணவில்லை என்று கணவர் விஜய் தஞ்சை மகளிர் பொலிஸில் முறைப்பாடு செய்தார்.
அந்த முறைப்பாட்டில் தனது மனைவி யாழினியை முன்னாள் அமைச்சர் ஜெயபால் மகன் ரீத்தீஷ் கடத்தி சென்று விட்டார். அவரை மீட்டு தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காணாமல் போன ரித்தீஷ், யாழினி மற்றும் இந்த கள்ளக்காதலுக்கு உடந்தையாக இருந்த நண்பர் ஆகியோரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- பொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..! (காணொளி)
- காவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை எதிர்த்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
- ராஜீவ் காந்தியை கொலை செய்ய இந்தியாவிற்கு வரவில்லை; சாந்தன்
- மும்பையில் சிஏஜி அலுவலக ஊழியர் ஆணவக் கொலை
- பெற்ரோல் விலை மீண்டும் உயர்வு
- ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த சுமார் 30 பயணிகளுக்கு மூக்கு, வாயில் ரத்தம்
- உற்பத்தியே இல்லாத காற்றாலை மின்வாரியத்தில் ரூ.9 கோடி ஊழல் – ஸ்டாலின் புகார்
- நிலானிக்கு எதிரான முக்கிய ஆதாரங்களை வெளியிடுவேன்! – உயிரிழந்த காந்தியின் சகோதரர் பரபரப்பு பேட்டி!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; police files kidnap case former minister jayapal tanjore