பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு, அவர்களது வீட்டில் இருந்து கடிதம் மற்றும் பரிசுப் பொருட்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் நீண்ட நாட்களாக குடும்பத்தை பிரிந்து இருக்கும் போட்டியாளர்கள் இந்தக் கடிதங்களைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் வடித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று பாலாஜிக்கு அவரது மனைவி நித்யாவும், மகள் போஷிகாவும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். Bigg boss Nithya write letter Balaji gossip
இன்று ஒளிபரப்பான புரோமோவில் பாலாஜிக்கு கடிதம் வந்த காட்சிகள் வருகின்றன. அந்த கடிதத்தில், வழக்கம்போல பாலாஜிக்கு நித்யா அறிவுரை சொல்கிறார். கடிதத்தின் இறுதியில் இப்படிக்கு பகுதியில் ‘ப்ரெண்ட் அண்ட் ப்ரெண்ட் ஒன்லி’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதைப் படித்த பாலாஜி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
எப்படியும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்றதும், தன் மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து வாழலாம் என்ற ஆசையில் இருக்கிறார். நித்யாவும் அதேபோல் தனக்காகக் காத்துக் கொண்டிருப்பார் என நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் நித்யா தான் பாலாஜிக்கு வெறும் தோழி மட்டுமே என்பதை இந்தக் கடிதம் மூலம் உறுதி செய்திருக்கிறார். இதனால் வருத்தப்படும் பாலாஜி கண்ணீர் வடிக்கிறார்.