முல்லைத்தீவில் பதற்றம் : அத்துமீறி நுழைந்த ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள்

0
756
mullaitivu 1000 fisherman protest

முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்துக்குள் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் அத்துமீறி நுழைந்தமையால் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சட்டவிரோத மீன்பிடியை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மீனவர்கள் அத்துமீறி கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்துக்குள் சற்றுமுன்னர் புகுந்துள்ளதாக தெரிவித்தார்.

குறித்த மீனவர்களை பொலிஸார் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிவருகின்ற நிலையில், மேலதிக பொலிஸாரை அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்து வரவழைத்து கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:mullaitivu 1000 fisherman protest,mullaitivu 1000 fisherman protest,mullaitivu 1000 fisherman protest