பிரான்ஸில், குற்றவாளியை துரத்தி சென்றவருக்கு உயிர் போன பரிதாபம்!

0
326
France perpetrator thrown culprit tamil news 

பிரான்ஸில், ஜோந்தாம் அதிகாரி ஒருவர், வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார். நபர் ஒருவரை துரத்திச் சென்றபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. France perpetrator thrown culprit tamil news 

இச்சம்பவம் Saint-Martin-aux-Chartains பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை, இப்பகுதியில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஜோந்தாம் அதிகாரி ஒருவர், காரில் சென்றுகொண்டிருந்த நபரை இடைமறித்துள்ளார்.

ஆனால், அவர் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளார். இதனால் அவரை கைது செய்யும் நோக்கில், உந்துருளியில் துரத்திச் சென்றுள்ளார்.

அச்சமயம், Saint-Martin-aux-Chartains பகுதியில் உள்ள ஆபத்தான வளைவு ஒன்றில் ஜோந்தாம் அதிகாரி கட்டுப்பாட்டை இழந்து, விபத்துக்குள்ளாகியுள்ளார். இதனால் 33 வயதுடைய குறித்த ஜோந்தாம் அதிகாரி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், உள்துறை அமைச்சர் Gerard Collomb, இதனை தெரிவித்தார். இது தவிர உயிரிழந்த அதிகாரியின் குடும்பத்தினருக்கு இரங்கல்களையும் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த வீரர் திருமணம் ஆனவர் எனவும், குழந்தை ஒன்றும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

tags :- France perpetrator thrown culprit tamil news

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்