பிரான்ஸில், ஜோந்தாம் அதிகாரி ஒருவர், வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார். நபர் ஒருவரை துரத்திச் சென்றபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. France perpetrator thrown culprit tamil news
இச்சம்பவம் Saint-Martin-aux-Chartains பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை, இப்பகுதியில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஜோந்தாம் அதிகாரி ஒருவர், காரில் சென்றுகொண்டிருந்த நபரை இடைமறித்துள்ளார்.
ஆனால், அவர் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளார். இதனால் அவரை கைது செய்யும் நோக்கில், உந்துருளியில் துரத்திச் சென்றுள்ளார்.
அச்சமயம், Saint-Martin-aux-Chartains பகுதியில் உள்ள ஆபத்தான வளைவு ஒன்றில் ஜோந்தாம் அதிகாரி கட்டுப்பாட்டை இழந்து, விபத்துக்குள்ளாகியுள்ளார். இதனால் 33 வயதுடைய குறித்த ஜோந்தாம் அதிகாரி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், உள்துறை அமைச்சர் Gerard Collomb, இதனை தெரிவித்தார். இது தவிர உயிரிழந்த அதிகாரியின் குடும்பத்தினருக்கு இரங்கல்களையும் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த வீரர் திருமணம் ஆனவர் எனவும், குழந்தை ஒன்றும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
tags :- France perpetrator thrown culprit tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- பிரான்ஸில் சிறைச்சாலைக்குளிருந்து வெளியிட்ட காணொளியால் பரபரப்பு!
- திருட வந்த வீட்டில் செய்த காரியத்தால் மாட்டி கொண்ட திருடர்கள்!
- டொரோண்டோ துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டார்!
- யாஷிகாவின் கட்டில் போர்வைக்குள் இருந்த மஹத்தின் உள்ளாடை! கண்டெடுத்த கார்த்தி.