பரிஸில் கோடைகாலத்துக்காக அமைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தில் இளைஞர் ஒருவர் மூழ்கியுள்ளார். இதனால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டை தோல்வியில் முடிந்துள்ளது. Youth drown Bassin de la Villette swimming pool
நேற்று புதன்கிழமை பிற்பகல் 03.30 மணி அளவில், 26 வயதுடைய இளைஞர் ஒருவர் Bassin de la Villette இல் குளித்துக்கொண்டிருந்தார். அதன்போது இளைஞன் திடீரென மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு மிக பாதுகாப்பாக நீச்சல் தடாகம் அமைக்கப்பட்டிருந்தபோதும் இந்த சம்பவம் எப்படி நடந்தது என அறியமுடியவில்லை. இது தொடர்பாக விசாரணைகளை பரிஸ் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில், குறித்த இளைஞன் நீச்சல் உடையில் தடாகத்துக்குள் இறங்கி குளித்த சில நிமிடங்களில் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், கடந்த ஜூன் 1 ஆம் திகதியில் இருந்து ஜூலை 5 ஆம் திகதி வரை பிரான்ஸில் மொத்தமாக 121 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
tags :- Youth drown Bassin de la Villette swimming pool
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- TIFF திரைப்பட தரப்படுத்தல் பட்டியல்!
- டொரோண்டோ துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டார்!
- பிரான்ஸில், காவற்துறை அதிகாரி சேவைத்துப்பாக்கியை மறந்ததால் நடந்த துயர சம்பவம்!
- யாஷிகாவின் கட்டில் போர்வைக்குள் இருந்த மஹத்தின் உள்ளாடை! கண்டெடுத்த கார்த்தி.